Friday, November 26, 2010

தரிசன மகிமை


"எனது தரிசனம் முடிந்த பின் அமைதியான ஒரு இடத்தில எப்போதும் அமரவும். அப்போது உங்களிடத்தில் ஓர் ஆழ்ந்த அமைதி ஊடுருவும். அத்துடன் எனது  ஆசீர்வாதத்தையும்  நீங்கள் முழுமையாக பெறுவீர்கள்.  இங்கே உங்களிடையே நான் வரும்போது என்னிடமிருந்து  என் ஆற்றல் வெளியேறுகின்றது. 

நீங்கள் உடனடியாக பேச முற்படுவீர்களாகில் இந்த  புனிதமான ஆற்றல்  கலைந்து, பயனற்று   என்னிடமே திரும்பி வந்து விடுகிறது.எனது பார்வை படும் இடம் எல்லாம் பேராற்றல் பெற்று புத்துணர்வுடன் திகழும் என்று உறுதி அளிக்கப்படுகிறது.ஒவ்வொரு நாளும் நீங்கள் மாறிக்கொண்டே இருக்கிறீர்கள். இந்த தரிசனத்தில் பெரும் பேற்றை ஒரு போதும் குறைத்து எடை போடாதீர்கள். உங்களிடையே நான் உலாவுவது அதி உன்னதமான தேவர்களுக்கு வழங்ககூடிய ஒரு வெகுமதி ஆகும். இந்த வெகுமதியை (அருளை) நீங்கள் தினமும்  பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள். அதற்க்கான நன்றியுடன் இருங்கள்.

நீங்கள் பெரும் இந்த ஆசீர்வாதம் உரிய காலத்தில் முழுமையான பலனை நல்கும். அதே சமயத்தில் இறைவனிடமிருந்து நீங்கள் அதிகமாக பெறுவதைப் போலவே, உங்களிடமிருந்தும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். "
                                                                                                                                                                             -பாபா  

<<<===============================================================>>>

No comments:

Post a Comment