Friday, February 4, 2011

அன்பின் பொறி



அன்பின் பொறி தன்னிடம் இல்லாத எந்த உயிரும் வாழவில்லை.  பித்தன் கூட ஏதோ ஒன்றையோ யாரோ ஒருவரையோ தீவிரமாக நேசிக்கிறான். இந்த அன்பு உனது உண்மைத்தன்மை நிலையான பிரேமஸ்வரூபனின் (அன்பின் வடிவத்தை ), உனக்குள் குடி கொண்டிருக்கும் இறைவனின் பிரதிபலிப்பே அன்றி வேறல்ல என்று நீ கண்டு கொள்ள வேண்டும். உனது இதயத்தில் கொப்பளிக்கின்ற அன்பின் ஊற்று இல்லாமல் உனக்கு நேசிக்க வேண்டும் என்ற உந்துதலே இருக்காது. அந்த ஊற்றினை கண்டுகொள். மேலும் மேலும் அதனையே சார்ந்து இரு. அதன் சாத்தியக்கூறினை வளர்த்துக்கொள். உலகம் முழுவதும் அதைக்கொண்டு பாசனம் செய். சுய நலத்தின் தொடுகை எதுவாயினும் அதனை துறந்துவிடு. யாருக்கு நீ பயன் தருகிறாயோ அவரிடமிருந்து பிரதியாக எதனையுமே எதிர்பார்த்து நாடி நிற்காதே. 
- ஸ்ரீ சத்ய சாயி  
Page 61, Chapter 8- சாலைகள் பல 
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம் - Volume 1

No comments:

Post a Comment